தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் 345வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு இன்று (8.11.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

புனித பரலோக மாதா பசலிகா பங்கு தந்தை மோயிஸ், கயத்தார் வட்டாட்சியர் அப்பனராஜ், பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் சீர்மிகு பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.