கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 89ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அன்னாரது திருவுருவ சிலைக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு PTR. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா MLA அவர்களும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாடு மற்றும் தமிழரின் முன்னேற்றத்திற்காக தன்னாலான அனைத்தையும் அர்பணித்த தியாகத் தமிழனின் வரலாற்றுப் பணிகளை நினைவுகூர்ந்த விருந்தினர்கள், இளைஞர் தலைமுறை சிதம்பரனாரின் தன்னலம் பாராத தேசப்பற்று, தொழில்முனைவு, பொது நல எண்ணங்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், உள்ளூர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.