தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டின் சாந்தி நகர் 3வது தெருவில், தனியார் நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வளர்ந்திருந்த கருவேல மரங்கள் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த மரங்களால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அடிக்கடி நடமாடி மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானதாக பொதுமக்கள் கவுன்சிலர் சரவணகுமாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு, இடம் முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் நலனுக்காக உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் சரவணகுமாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.