தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மழைக்காலத்துக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கோக்கூர் குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரி மற்றும் அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கண்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர். மேலும் பல கழக நிர்வாகிகளும் பங்குபெற்றனர்.

மழை காலத்தில் நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர் வசதி மேம்படுவதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இப்பணிகள் விரைவில் முடிவடையும் என மேயர் தெரிவித்தார்.