தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டில் உள்ள லயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியரிடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.

இந்த முயற்சியில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அதிமுக வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 47 வது வார்டு குடியிருப்போர் நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மற்ற துணை செயலாளர் சகாயராஜ் (Ex. M.C), மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, பட்டா பிரச்சினையில் பொதுமக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியையும் வலியுறுத்தியது.