தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் மேகநாதன், வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல் நகர் மற்றும் அய்யன் கோவில் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நேரத்தில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.