தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதிக்கு உட்பட்ட 4டி ஹவுசிங் போர்டு பகுதியில் உருவாகி வரும் பிங்க் பார்க் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, சுப்புலெட்சுமி ஆகியோர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்படும் இந்த பிங்க் பார்க்கில்

குளிர்சாதன வசதியுடன் இன்டோர் ஜிம்

அவுட்டோர் ஜிம்

ஓபன் ஏர் தியேட்டர் (OAT)

வாக்கிங் டிராக்

பேட்மிண்டன் தளம்

பாஸ்கெட் பால் தளம்
உட்பட பல சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் யோகா பயிற்சி செய்யும் வசதிகளும் தனிச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பிங்க் பார்க் முழுக்க முழுக்க பெண்கள் பயன் பெறும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பணிகளை விரைந்து முடித்து இந்த மாத இறுதிக்குள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதோடு பார்க்கிற்கு எதிரில் தேங்கியிருந்த மழைநீரை ஆய்வு செய்து, அதை துரிதமாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.