ஜனசங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய், முன்னாள் ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, முன்னாள் விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைசெல்வன், சக்தி கேந்திர பொறுப்பாளர் லெட்சுமணன், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், கார்த்தீசன், ராமர் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.