ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலர் கண்ணன், ஒப்பந்தகாரர் முகமது, கிளைக் கழகச் செயலாளர் கனகராஜ், இளைஞரணி பொன்ராஜ், குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.