தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று மாலை நடைபெற்றது.

விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் பி.பி.  ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர திமுக செயலாளர் எஸ். ஆர். ஆனந்த் சேரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கழகத் துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு கிரைண்டர் , மிதிவண்டி, இஸ்திரி பெட்டி, விளையாட்டு உபகரணங்கள், தையல் மிஷின், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, நலிவடைந்த பெண்களுக்கு நிதியுதவி, உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாநில பேச்சாளர் இருதயராஜ், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் செல்வராஜ், ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ரவீந்திரன், கோட்டு ராஜா, ஜான் அலெக்சாண்டர், கஸ்தூரி தங்கம், சி.எஸ். ராஜா, கோ. ஏசுதாஸ், கீதா முருகேசன், எஸ்.பி. கனகராஜ், பிரமிளா , அனந்தையா,  ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், மதியழகன், சீனிவாசன், கவிதாதேவி, பாலகுருசாமி, டி.கே.எஸ். ரமேஷ், அபிராமிநாதன், குபேர் இளம் பருதி, ஆபிரகாம், அந்தோணி ஸ்டாலின், ஜெபசிங், எஸ்.எஸ்.பி. அசோக், மீனாட்சி சுந்தரம், இசக்கி ராஜா, செல்வகுமா,ர் சுந்தரவேல், சேர்மபாண்டியன், எம்.பி. முருகேசன், ஏசுவடியான், நாராயணன், மரைக்காயர், சுரேஷ், ராஜ்குமார்,

மாமன்ற உறுப்பினர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், பவானி மார்சல், செபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, கண்ணன், ராமர், ஜெயசீலி, சீனிவாசன் (எ) ஜான், சோமசுந்தரி, ஜான்ஸி ராணி, மகேஸ்வரி, மெட்டில்டா, ராஜதுரை, மரிய கீதா, சரண்யா, அதிர்ஷ்ட மணி, கந்தசாமி, பொன்னப்பன், விஜயலட்சுமி, பாப்பாத்தி, சுயம்பு, ரிட்டா ஆர்தர் மச்சாது, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், ராஜேந்திரன், வைதேகி, சரவணகுமார், விஜயகுமார், பச்சிராஜ், மற்றும் மாவட்ட மாநகர அணி நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.