தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வ.உ.சி. கல்லூரி செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி படிப்பகம் அருகில் செயற்கை புல் தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர், திமுக மாநில துணைச் செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயற்கை புல் தரை மைதானத்தை திறந்து வைத்து மைதானத்தை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் வாலிபால் வழங்கி விளையாட்டினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ரூரல் டி.எஸ்.பி. மதன், கோட்டாட்சியர் பிரபு, மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.