தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கில் மாநில சுயாட்சிக் கொள்கையை நிலைநாட்டும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருப்பதை முன்னிட்டு, தீர்ப்பைப் பெற்றுத் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மக்களாட்சி தத்துவம் நிலைநாட்டப்பட்டதைக் கொண்டாடும் விதமாகவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கின் முன்பு, மாவட்டக் கழக செயலாளர், மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தலின்படி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், பிரமிளா, பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் முக்கையா, பாலு, பாலன், கருப்பசாமி, சாமிநாதன், கங்கா ராஜேஷ், செல்வராஜ், சுரேஷ் குமார், பொன்னுச்சாமி, சுரேஷ் மகாராஜன், சுரேஷ், சதீஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சி ராணி, தெய்வேந்திரன், இசக்கிராஜா, ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், ஜான் சீனிவாசன், ரெக்சிலின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, அயலக அணி மாநகர அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, தகவல் தொழில் நுட்ப அணி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மார்க்கின் ராபர்ட், முருகப்பெருமாள், உமா மகேஷ், சந்தன முனிஸ்வரன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.