ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு சாரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ சேவைகளை நேரில் கேட்டறிந்த அவர், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், ஆயூஷ் துறையினர் வழங்கிய மூலிகை செடி, மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, வட்டார மருத்துவ அலுவலர் சக்திபிரியா, ஒன்றிய செயலாளர் ராமசாமி, அவைத்தலைவர் வெங்கடசுப்பு, முருகன், அயலக அணி சஞ்சய் சொக்கலிங்கம், மகளிரணி மாரியம்மாள், கிளை செயலாளர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.