தூத்துக்குடி மாநகரம் திரேஸ்புரம் பகுதியில் திமுக சார்பில் முதல்வரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரை நிகழ்த்திய கொண்டு இருக்கும் வேளையில் அருகில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு விரதங்களை கடைபிடித்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது மேடையில் பேசி கொண்டு இருந்த அமைச்சர் தொழுகை பாடல் ஒலிபெருக்கியின் மூலம் கேட்ட உடனே தனது பேச்சை நிறுத்தி அமைதி காத்து தொழுகைக்கு உரிய மரியாதை அளித்து பின்பு தனது உரையை தொடங்கினார்.
சில நிமிடம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைதி காத்தது. அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களிடையே பேசும் பொருளானது. பின்னர் திரேஸ்புரம் பகுதி மக்களுக்கு தனது கரங்களால் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் மாவட்ட கழக நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பள்ளிவாசலில் தொழுகை பேச்சு நிறுத்தி அமைதி காத்த அமைச்சர் கீதா ஜீவன்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக பிரமுகர் காசிலிங்கம் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்!!
அடுத்த
131 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டா - அமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026