தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றத்தை எளிதாக்க மின் மோட்டார் அறை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோரும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மழைக்காலத்தில் மக்கள் இடையூறு அடையாமல் இருக்க மாநகராட்சி மேற்கொண்டு வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.