தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான வாகனப் பணிமனையை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

இந்த நேரத்தில், பணிமனைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, பழுதுபார்க்கப்படும் பணிகள், மேற்கொள்ளப்படும் பராமரிப்புகள், பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை அவர் விரிவாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.