தூத்துக்குடி நகரில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையினால் கிழக்கு மண்டலப்பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாமல் வடிகால் வழியாக சரியாக வெளியேறுகிறதா என்பதை நேரில் பார்வையிட மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் வெளியேற்ற நிலையை முழுமையாக ஆய்வு செய்த அவர், தடங்கல் இல்லாமல் நீர் ஓடுவதற்கு தேவையான உடனடி பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர்ப்பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.