மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் தீர்வுகள் காணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி. பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், பேபி ஏஞ்சலின், மும்தாஜ், ராமு அம்மாள், தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின் மற்றும் வட்ட கழக செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.