தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

மழைக்காலத்தை முன்னிட்டு நடைபெறும் வடிகால் பராமரிப்பு பணிகள் விரைவாகவும் தரமாகவும் முடிக்கப்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.