தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் வகையில் சிதம்பரநகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் உடன் பங்கேற்றனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் இணைந்தனர்.