ஜெகன் மூர்த்தியாைரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து இன்று இரவு 7.20 மணியளவில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் அருகில் பல்க் ஜங்ஷன் எதிரே தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் டாக்டர்.பூவை எம். ஜெகன் மூர்த்தியார் மீது பொய் வழக்கு போடக்கூடாது, தமிழக அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று முழக்கமிட்டு சாலை மறியல் போராட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்றது .
இதில் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப், மாவட்ட பொருளாளர் சு. ஜெரினா பானு, மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் த. மகேந்திரன், மாவட்ட A P.L.F அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணை செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகளை முத்தையாபுரம் காவல் துறை அதிகாரிகள் கைது செய்து பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி
கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நெய்தல் விழாவில் உற்சாகமாக பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்!!
அடுத்த
கே.வி. குப்பம் எம்.எல்.ஏ., டாக்டர். ஜெகன் மூர்த்தியார் மீது பொய் வழக்கு போடாதே, கைது நடவடிக்கையில் ஈடுபடாதே என்று தமிழக அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கைது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026