சமூக நலப்பணிகளில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வரும் மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் இன்று தூத்துக்குடி நகரில் சாலையோரத்தில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், 50 குடும்பங்களுக்கு புதிய உடைகள் வழங்கப்பட்டன. மேலும், அங்கு வசிக்கும் அனைவருக்கும் போர்வைகள் மற்றும் பசியாற உணவுகளும் வழங்கப்பட்டன.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழும் இக்குடும்பங்களுக்கு இது பெரும் ஊக்கமும் ஆதரவாக அமைந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் பேச்சிராஜா, சின்னத்துரை, சுதாகர், லக்ஷ்மணன், செல்வி, கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சேவையில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது பேசினார் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. எம்.ஆதி ஆனந்த் “பழங்குடியினர் குடும்பங்கள் கேட்டுக்கொண்ட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளை விரைவில் செய்து தருவோம். சமூக நலனுக்காக மருதம் அறக்கட்டளை எப்போதும் மக்களின் பக்கம் நிற்கும்” என்று தெரிவித்தார்.