தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எழில் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் குறித்து மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.

சீரமைக்கப்பட்ட கால்வாய்களை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கொண்ட பணிகளின் தரம், நீர் ஓடும் நிலை உள்ளிட்ட விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சுகாதாரச் சீர்கேடைத் தவிர்க்க தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பணிகளை துரிதமாக முடிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால், எழில் நகர் பகுதி மக்கள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றியை தெரிவித்தனர்.