மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 273ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் மற்றும் பரத குல ஊர் நலக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஜெயந்தி விழா அழைப்பிதழை அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனுக்கு இன்று வழங்கினர்.

நிகழ்வில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் (Ex.MC), சிறுபான்மை பிரிவு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பரத சமூகத்தினரின் வரலாற்று பெருமையை நினைவூட்டும் இந்த ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.