தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் இடையறாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
திருவைகுண்டம் அணைக்கட்டு வழியாக தற்போது 11,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஆற்றுப்படுகை மற்றும் கரையோர கிராமங்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இன்று (24.11.2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிக்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அவர் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு, கீழ்நீர் பகுதிகளுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை விரைவாக செயல்படுத்த அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்: திருவைகுண்டம் அணைக்கட்டு நிலைமையை நேரில் மதிப்பீடு செய்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அய்யர்விளை வெள்ளப்பெருக்கு – அமைச்சர் கீதாஜீவன் துரித நடவடிக்கை!!
அடுத்த
வெள்ளநீர் சூழ்ந்த ஏரல் தரைப்பாலம்: பாதிப்பை நேரில் மதிப்பீடு செய்த எம்.பி. கனிமொழி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026