விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் தென்பாகம் பனையூர் கிராமத்தில் பலவேசக்காரன் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் குளத்தூர் பெரிய கண்மாய் – கோவங்குளம் கண்மாய் இணைக்கும் கால்வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் வேல்முனியாண்டி அவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தார்.
பனையூர் கிராமம் சர்வே எண் 511/53–ல் பல தலைமுறைகளாக பலவேசக்காரன் கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வந்த இடத்தை, பனையூர் வேலையா நாடார் மகன் மாணிக்கம் நாடார் ஆக்கிரமித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குளத்தூர் பெரிய கண்மாய் – கோவங்குளம் கண்மாய் கால்வாயும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் செல்லும் வழி தடைப்பட்டு, மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீர் கடலுக்கு வீணாகச் செல்கிறது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கால்வாய் மற்றும் கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றி, தகுந்த நடவடிக்கை எடுத்து கோவில் இடத்தை மீட்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் வேல்முனியாண்டி கோரிக்கை விடுத்தார். மனு அளிக்கும் போது கோபால் உடன் இருந்தார்.
தூத்துக்குடி
பலவேசக்காரன் கோவில் நிலம் மற்றும் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு — மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பில் தூத்துக்குடி மருத்துவ–ஆலய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
குளத்தூரில் கல் கோரி எதிர்ப்பு உச்சம் – PUCL தலைவர் மீதான தாக்குதலுக்கும் கடும் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026