குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான எரிபந்தாட்டப் போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்கள் பெற்ற வெற்றியை பாராட்டிய கீதா ஜீவன், அவர்கள் தொடர்ந்து மாநில, தேசிய மட்டப் போட்டிகளிலும் சாதனை படைக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன், முன்னாள் பகுதி பிரதிநிதி பஞ்சுராஜ், உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்தச் சாதனை மாணவர்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கைக்கு வலுசேர்த்துள்ளது.
தூத்துக்குடி
மாவட்ட எரிபந்தாட்டப் போட்டியில் சாம்பியன் — தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அருணாச்சலபுரத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறப்பு!!
அடுத்த
பால்பாண்டி நகர் முதல் கோக்கூர் வரை – வடிகால் பணிகள் ஆய்வில் மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026