உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன், உரிமைகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிலை நிர்வாகத்தினர் மற்றும் தலைவர்கள் சார்பில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தினருக்கு தொடர் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் “ஒற்றுமையை வளர்ப்போம்” என்ற உறுதிமொழி சங்கத்தினரிடம் மேற்கொள்ளப்பட்டது. சமூக ஒற்றுமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வாக இது அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு சங்கத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P. கீதாஜீவன், சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என கூறினார்.

இத்துடன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் N.P. ஜெகன் பெரியசாமி, மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் அனைவருடனும் இணைந்து பங்கேற்று ஒத்துழைத்த
Lion M. மருதப்பெருமாள், M.Com
மாநில தலைவர்,
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம்
Cell : 9442635879
அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த தொடர் நிகழ்வுகள், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையும், ஒற்றுமையும் நிறைந்த விழிப்புணர்வை உருவாக்கின.