தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இந்நிகழ்ச்சியின் பகுதியாக தூத்துக்குடி பங்களா தெருவைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் ராதை வேடமணிந்து முக்கிய சாலைகள் வழியாக கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் குழந்தைகள் பல்வேறு பாடல்களுக்கு அழகிய கோலாட்ட நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

நிகழ்ச்சியை தினமலர் தினேஷ் துவக்கி வைத்து, பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர் ஆறுமுகம், அதிமுக வக்கீல் அணி மாவட்ட இணைச் செயலாளர் சரவணப்பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.