தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியின் பகுதியாக தூத்துக்குடி பங்களா தெருவைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் ராதை வேடமணிந்து முக்கிய சாலைகள் வழியாக கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் குழந்தைகள் பல்வேறு பாடல்களுக்கு அழகிய கோலாட்ட நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நிகழ்ச்சியை தினமலர் தினேஷ் துவக்கி வைத்து, பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர் ஆறுமுகம், அதிமுக வக்கீல் அணி மாவட்ட இணைச் செயலாளர் சரவணப்பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குழந்தைகள் ராதை வேடமணிந்து கோலாட்டம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய இபிஎஸ் – ‘‘விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம்… குற்றம் சொல்ல விருப்பமில்லை’’
அடுத்த
தூத்துக்குடியில் காமாட்க்ஷி பாலி கிளினிக் புதிய மருத்துவமனை திறப்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026