தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மரம் வரம் அறக்கட்டளை நிறுவனர் ராமன் என்ற ராமகிருஷ்ணன் தனது 47வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு சமூக நல செயல்களை மேற்கொண்டார்.

இன்று மதியம் தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள மகிழ்வகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்கி மகிழ்வகத்தில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்தார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், இது அவரின் 10வது ரத்த தானம் மற்றும் இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது தடவை ரத்த தானம் செய்துள்ளார்.

அதேவேளை, புதுக்கோட்டை எல்ஐசி அலுவலகத்தில் LIC முகவர் சக்திவேல் முருகன் தலைமையில் ராமகிருஷ்ணனின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குமரகிரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் ஜெயகணேஷ், நாகராஜ், முத்து, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

சமூக நல சேவைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ராமகிருஷ்ணனின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.