இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு என்பது நாட்டின் அடையாளம், குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் சமநிலைப்படுத்தும் மகத்தான ஆவணம் என அவர் கூறியுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பின் கொள்கைகளை மதித்து பின்பற்றவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “அரசியலமைப்பு தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும் அல்ல; அதன் கொள்கைகளை நினைவுபடுத்தும் விழிப்புணர்வு நாளாக நாம் அணுக வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.