தூத்துக்குடி புதுக்கோட்டை மெயின் பஜாரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா மற்றும் தலைமை காவலர்கள் ஒருங்கிணைப்போடு,

தூத்துக்குடி தமிழன்டா கலைக் குழுவினர் ஜெகஜீவன் தலைமையில் இணைந்து குழந்தைகள், மாணவ மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு குற்ற தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் பாட்டு பாடி, நடனம் ஆடி, நோட்டீஸ் விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.