தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி கொறடாவும், 51 வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வரி குடிநீர் இணைப்பு வரி மற்றும் சொத்து வரி, தொழில் வரி, போன்ற வரிகளை உயர்த்தி உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் உயர்த்திய வரிகளை கட்ட முடியாமல் தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக எதிர்கட்சி கொறாடா கவுன்சிலர் மந்திர மூர்த்தி தலைமையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநடப்பின் போது கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, ஜெயராணி, பத்மாவதி, வெற்றி செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோரிக்கை மனு ஏற்பு உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி!.., நன்றி!!
அடுத்த
தூத்துக்குடி 50 வது வார்டு பகுதியில் தார் சாலை வசதிகள் அமைத்து தர கவுன்சிலர் சரவணகுமார் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026