தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி கார் ஒன்று சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்ததில் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது.

இந்த துயர சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் சாலையோரம் பயன்பாடு இல்லாத மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் இருந்து செந்நெல்பட்டி செல்லும் சாலையில் கீழபுத்தனேரி அஹ்ரகாரம் பகுதியில் ஒரு பாலடைந்த கிணறு எந்தவித பராமாரிப்பும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதனை உடனடியாக மூட வேண்டும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த கிணற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வசவப்புரம் மு. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.