மதுரை பிரம்மா குமாரிகள் துணை மண்டலம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேரணி செப்டம்பர் 8ஆம் தேதி மதுரையில் இருந்து துவங்கி பல்வேறு இடங்களைச் சுற்றி வந்தது. இப்பேரணி சனிக்கிழமை (25.09.2019) மாலை 6.00 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தது.
தூத்துக்குடி பிரம்மா குமாரிகள் கிளை நிலையம் ஓம் சாந்தி தியான மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், பேரணியை நமது மாநகரில் துவக்கி வைக்கும் முகமாக ஸ்டீபன் மாஸ்டர் (மாவட்ட பேராவிளையாட்டு துறை செயலாளர்), ஷெர்லி மேடம் (மாற்றுத்திறனாளி மகளிர் அணி தலைவி), மோசஸ் (அமர்வு கைப்பந்து கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். விழாவை முன்னிட்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுத்தொடர் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பேரணியின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, அனைவரிடமும் சம உரிமையுடன் வாழ வழிவகை செய்வதாகும்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் பேரணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக – அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம்!!
அடுத்த
பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026