மதுரை பிரம்மா குமாரிகள் துணை மண்டலம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேரணி செப்டம்பர் 8ஆம் தேதி மதுரையில் இருந்து துவங்கி பல்வேறு இடங்களைச் சுற்றி வந்தது. இப்பேரணி சனிக்கிழமை (25.09.2019) மாலை 6.00 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தது.

தூத்துக்குடி பிரம்மா குமாரிகள் கிளை நிலையம் ஓம் சாந்தி தியான மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், பேரணியை நமது மாநகரில் துவக்கி வைக்கும் முகமாக ஸ்டீபன் மாஸ்டர் (மாவட்ட பேராவிளையாட்டு துறை செயலாளர்), ஷெர்லி மேடம் (மாற்றுத்திறனாளி மகளிர் அணி தலைவி), மோசஸ் (அமர்வு கைப்பந்து கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். விழாவை முன்னிட்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுத்தொடர் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த பேரணியின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, அனைவரிடமும் சம உரிமையுடன் வாழ வழிவகை செய்வதாகும்.