தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேற்கு காமராஜர் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலைமையை நேரில் அறிய ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார்.

மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் இருந்து மின்மோட்டார் மூலம் விரைவாக நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கூறினார். மேலும் பள்ளமாக உள்ள சாலைகளை சரளமாக்கும் பணிகள் நடைபெற்றுவரும் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக செல்லும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இம்மாவட்ட ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட்ராஜா, பணி மேற்பார்வையாளர் சோமு, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C ராஜேந்திரன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ், இளைஞர் அணி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.