மாநில திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகரம் முழுவதும் உற்சாகம் நிலவியது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.

விழாவின் சிறப்பம்சமாக, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி, பொதுமக்கள், ஆட்டோ தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்தார்.

நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மாவட்ட, மாநகர, மண்டல, வட்ட அளவிலான அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் இளைஞரணி அமைப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மக்களுடன் இணைந்து கொண்டாடினர்.