தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி மின் மோட்டார் அறை, தற்காலிக வடிகால்கள் மற்றும் நீர் தேங்கும் முக்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு நடைமுறையான பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்து நிலைமையை விளக்கி, மேலும் தேவையான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஓம் சாந்தி நகரில் நீர் தேக்கம் நீங்கும் வரை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மை எனவும் மேயர் தெரிவித்தார்.