தூத்துக்குடி மாநகராட்சியை மாசமில்லா, தூய்மையான நகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி சாலை ஓரங்களில் குவிந்த மணல் திட்டுகளை அகற்ற இரண்டு புதிய டிராக்டர் டோசர்கள் இன்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ஜான்சிராணி, தனலட்சுமி, விஜயலட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, அந்தோணி மார்ஷலின், வைதேகி, நாகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய இயந்திரங்களை மாநகராட்சி பணிகளில் பயன்படுத்த தொடங்கினர்.

இந்த புதிய டிராக்டர் டோசர்கள் சாலை பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகளை விரைவாகவும் திறம்படவும் செய்ய உதவும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.