தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் ரூ.47.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தப் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் துவக்கிவைத்தார்.

நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வெம்பூர், அயன்கரிசல்குளம், மாவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 363 குடியிருப்புகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிலையை G.V. மார்கண்டேயன் நேரில் ஆய்வு செய்தார். குடிநீர் சேமிப்புத் தொட்டிகள், குழாய் இணைப்புகள், நீர்விநியோக முறை உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து, தேவையான திருத்தங்களை வேகமாகச் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் நேரில் கேட்டறிந்தார்.

ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணை பொறியாளர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்தனர்.

அதேபோல், விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம்–புதூர் கந்தசாமிபுரம் மற்றும் விளாத்திகுளம்–பெருநாழி கீழநம்பிபுரம் பாதைகளுக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட இரண்டு மகளிர் விடியல் பேருந்துகள் இன்று துவக்கிவிடப்பட்டன. பேருந்துகளை G.V. மார்கண்டேயன் கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் சண்முகம், விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M. சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், மும்மூர்த்தி, செல்வராஜ், கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாணவரணி மற்றும் கலைஅணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளின் சாலை வசதி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து சேவை விரிவாக்கம் போன்ற துறைகளில் புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஒரே நாளில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.