தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த தூத்துக்குடி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் கடுமையாக காயமடைந்தார்.

இன்று (27.11.2025) இதனைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்து உடல்நல நிலை குறித்து கேட்டறிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாப்பிள்ளையூரணி வந்தார்.

சரவணகுமாரின் தொடர்ந்த சிகிச்சை, மருத்துவர்கள் அளித்து வரும் பராமரிப்பு உள்ளிட்ட விவரங்களை குடும்பத்தினரிடமும், மருத்துவர்களிடமும் கனிமொழி கருணாநிதி விசாரித்து விரைவில் நலம்பெற வாழ்த்தினார்.

இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஓட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் திமுக ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர்.