தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் நடைபெறும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் தரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மழைக்காலத்திற்கு முன்னதாக பொதுமக்கள் சிரமமின்றி பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நகரின் அனைத்து பகுதிகளிலும் வடிகால் அமைப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், மாநகராட்சி எந்தவித அலட்சியத்தையும் கடைப்பிடிக்காது என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.