தூத்துக்குடி, நவம்பர் 28 தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் இயங்கி வரும் டிலைட் பப்ளிக் பள்ளியின் ஒரு பிரிவாக செயல்படும் டிலைட் ரைபிள் அகாடமி, மாநில அளவிலான 2வது ஜிசி இன்டர் கிளப் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான சாதனையைப் புரிந்து மாவட்டத்தின் உயரத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

திண்டுக்கல்லில் 2025ம் ஆண்டு 15ம் தேதி நடைபெற்ற இந்த மாநில அளவுப் போட்டியில், டிலைட் பள்ளி முதல்வர், மாணவர்கள், பள்ளி செயலாளர் மற்றும் அகாடமி உறுப்பினர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்றனர்.

சாதனை படைத்த பதக்க வீரர்கள்

மெர்லின் பிரமிளா – தங்கப் பதக்கம்

சோபியா செல்வராணி – வெள்ளிப் பதக்கம்

பயிற்சியாளர் டோனிக் சத்யா – வெள்ளிப் பதக்கம்

மாணவி சத்யா – வெள்ளிப் பதக்கம்

ரக்ஷனா சாய்வி – வெண்கலப் பதக்கம்

புதியதாக துவங்கப்பட்ட டிலைட் ரைபிள் அகாடமிக்கு இது மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மாணவர்களின் சாதனையையும், பயிற்சியாளர்களின் அர்பணிப்பையும் பாராட்டி, டிலைட் பப்ளிக் பள்ளி தலைவர் ஜெயசீலன், தாளாளர் பிரபாகரன் ஜான் ஜெயக்குமார், பயிற்சியாளர் அண்டோனி மால்லன் நட்டர்ஜி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

டிலைட் ரைபிள் அகாடமியின் இச்சிறப்பு சாதனை, மாவட்டத்தில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்குகிறது.