கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் யூனியனில் உள்ள தெற்கு இலந்தகுலம் பஞ்சாயத்து, ஆத்திகுளம் ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது மக்காச்சோளம் பயிர்களை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க தோட்டத்தில் மின் வேலி அமைத்திருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவத்தையடுத்து, வடிவேலுவின் மனைவி சுப்புத்தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் சென்று ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து உதவித்தொகையையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கயத்தார் மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெயில்முத்து, கிளைச் செயலாளர் ராஜ்குமார், கிளை பொருளாளர் கருமாரி, லட்சுமி, கோமதி, காளிராஜ், கமலேஷ், கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.