ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேககநல்லூர் ஊராட்சி ஓசநூத்து கிராம மக்கள் குலசேகரநல்லூர் கிராமத்திற்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர். பொதுமக்கள், வயதானவர்கள் மழைக்காலங்களில் ரேசன் பொருட்கள் வாங்கி வர  சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் ஒசநூத்து கிராமத்தில் கிளைக் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பகுதி நேர கடை அமைக்க அனுமதி பெற்று தந்து இன்று துவக்கி வைத்தும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேப்பாட்டு திட்டநிதி - 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல்தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்க செயலாளர் முருகன், மாரிமுத்து துணை வட்டாட்சியர் டென்சிங் டாங்கே, விற்பனையாளர் அலமேலு மங்கை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஊராட்சி செயலர் முருகேசன், மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன், தொண்டரணி கோபால், தொழிலாளர் அணி கருப்பசாமி, விவசாய அணி குருசாமி, முன்னாள் கவுன்சிலர் மொட்டைய சாமி, கிளைச் செயலாளர் சண்முகம், ஒப்பந்தகாரர் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.