ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேககநல்லூர் ஊராட்சி ஓசநூத்து கிராம மக்கள் குலசேகரநல்லூர் கிராமத்திற்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர். பொதுமக்கள், வயதானவர்கள் மழைக்காலங்களில் ரேசன் பொருட்கள் வாங்கி வர சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் ஒசநூத்து கிராமத்தில் கிளைக் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பகுதி நேர கடை அமைக்க அனுமதி பெற்று தந்து இன்று துவக்கி வைத்தும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேப்பாட்டு திட்டநிதி - 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல்தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்க செயலாளர் முருகன், மாரிமுத்து துணை வட்டாட்சியர் டென்சிங் டாங்கே, விற்பனையாளர் அலமேலு மங்கை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஊராட்சி செயலர் முருகேசன், மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன், தொண்டரணி கோபால், தொழிலாளர் அணி கருப்பசாமி, விவசாய அணி குருசாமி, முன்னாள் கவுன்சிலர் மொட்டைய சாமி, கிளைச் செயலாளர் சண்முகம், ஒப்பந்தகாரர் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓசநூத்து கிராம மக்களின் கோரிக்கை ஏற்பு - எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளர்கள் வலை தள பயிற்சி கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குலையன்கரிசல் கிராமத்தில் காமராஜரின் வெண்கல முழு திருவுருவச் சிலையை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026