ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் விடியல் புதிய பேருந்து சேவைகள் உற்சாகமான முறையில் இன்று தொடங்கின. தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் (தடம் எண் 55ஏ) மற்றும் தூத்துக்குடி – மேலச் செக்காரக்குடி (தடம் எண் 56டி) வழித்தடங்களில் இயக்கப்படும் புதிய விடியல் பேருந்துகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேருந்து சேவையை தொடங்கி வைத்ததும், புதிதாக அறிமுகமான விடியல் பேருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து நேரடியாக ஏறிப் பயணம் செய்த எம்எல்ஏ சண்முகையா, பயணிகளுக்கு அசத்தலாகவே ஆச்சரியம் அளித்தார். பயணத்தின் போது புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் பாதையில் மக்களுடன் கலந்துரையாடி, சேவைக்கு அவர்களின் பாராட்டுகளையும் நேரில் கேட்டார்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் ரமேஷ் பாபு, தொமுச தூத்துக்குடி நகர கிளை செயலாளர் லிங்குசாமி, பொருளாளர் மனோகரவேல், நிர்வாகிகள் கே. பரமசிவன், மாடசாமி, ஜோன், படையப்பா கணேஷ், பி. மாடசாமி உள்ளிட்டோர் மற்றும் திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதியம்புத்தூரில் துவங்கப்பட்ட இந்த விடியல் பேருந்து சேவை பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பான பயணத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.