தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து புறவழிச் சாலையில் அமைந்துள்ள வின்பாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட புதிய வழித் தடத்தில் தார் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் ராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் நிறைவடைந்தால், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்க பிரச்சினைகள் குறைந்து, பொதுமக்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.