தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் விவசாயிகள் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து, வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக, திலி.தனி 127 – சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுதல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமசந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கூட்டுறவு சங்க செயலாளர் சுசிலா, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பெப்பின்காகு, கிளைச் செயலாளர்கள் சடையாண்டி, சந்திரசேகரன், சரவணன், சுந்தர், அழகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், திலி.தனி 214 – ராமச்சந்திராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுமானப் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டன. இதில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமசந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் மகேஷ், கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன், ஒன்றிய பொருளாளர் கோசலைராம், ஊர் தர்மகத்தா அஸ்வத்தம்மன், கிளைச் செயலாளர் காந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி முருகேசன், கிளைச் செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பாலமுருகன், விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கனகஜோதி சௌந்தரபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளிமுத்து, ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.