ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், வடக்கு காரசேரி கிராமம் அருகே கடம்பூர் புளியம்பட்டி – தெய்வச்செயல்புரம் சாலை 31/2 முதல் 33/4 வரை ஒருவழித் தடத்தை இருவழித்தடமாக மாற்றி அகலப்படுத்தும் பணிகள் தொடங்கின.
மேலும், சாலையை உறுதிப்படுத்துதல், வடிகால் திரும்பக் கட்டுதல், தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு எம்.சி. சண்முகையா எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர் இசக்கிராஜ், கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, வடக்கு காரசேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள், கணேசன், துணைத் தலைவர் சொர்ணம், கிளை செயலாளர் நம்பி, மகளிரணி ஆனந்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராசாமணி, இளைஞரணி நாகமணி, முன்னாள் நாட்டாமை நயினார், கிளை அவைத் தலைவர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சொர்ணலட்சுமி, கல்பணா, பெரியதுரை, தொ.மு.ச. நிர்வாகி சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.