உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரேஸ்புரம் முத்தரையர் நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பவானி, வட்டப்பிரதிநிதிகள் மார்ஷல், இசக்கிமுத்து, சிதம்பரனார் சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் அந்தோணி, பொருளாளர் ரவி, முத்தரையர் சமுதாய சங்கத் தலைவர் சந்தன செல்வம், மேட்டுப்பட்டி முத்தரையர் சங்கத் தலைவர் முத்து மற்றும் சமுதாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.